தேசிய விளையாட்டில் பங்கேற்ற எஸ்எஸ்ஐ மாரடைப்பால் சாவு

திருவெறும்பூர்: திருவனந்தபுரத்தில் தேசிய அளவில் நடந்த கூடைப்பந்து போட்டியில் விளையாடிய திருச்சி எஸ்எஸ்ஐ திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். திருச்சி பொன்மலை அருகே கொட்டப்பட்டு, வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ராஜ்மோகன் (49). திருவெறும்பூர் உட்கோட்ட போலீஸ் சரகத்திற்குட்பட்ட நவல்பட்டு ஸ்டேஷனில் எஸ்எஸ்ஐ யாக பணியாற்றி வந்த இவர், கடந்த 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை தற்செயல் விடுமுறை பெற்றதன் அனுமதியில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்து வரும் தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் பங்கேற்க சென்றார்.

இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் பிற்பகல் 12 மணியளவில் அவர் பங்கேற்று விளையாடினார். இதில் ராஜ்மோகனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டதை தொடர்ந்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே ராஜ்மோகன் இறந்து விட்டதை உறுதி செய்தனர். இதனைத்தொடர்ந்து அவரது உடல் கேரளா மாநிலம் பாளையம் மருத்துவ கல்லூரியில் வைக்கப்பட்டது. இறந்த ராஜ்மோகனுக்கு மனைவியும், ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு