சிகிச்சையில் தாமதம் உள்ளிட்ட காரணங்களை குறிப்பிட்டு டீன் நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை கலெக்டர் சங்கீதா விசாரணை அறிக்கை தாக்கல் செய்யும்படி கூறியுள்ளார். இது தொடர்பாக மாநில மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக துறை உதவி அதிகாரி, சுகாதார துறை உதவி அதிகாரி, டிஆர்ஓ ஆகியோர் அடங்கிய குழுவினர் மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக, மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத், மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு தீவிர சிகிச்சை வார்டிற்குள் நுழைந்து மருத்துவர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார் எழுந்தது.
அவரை சஸ்பெண்ட் செய்ய கோரி தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தினர் நேற்று போராட்டம் நடத்தினர். மதுரை அரசு மருத்துவமனை தரப்பில் கூறும்போது, ‘‘நகர்புற சுகாதார நிலையங்களில் இருந்து கடைசி நேரத்தில் கர்ப்பிணிகளை அழைத்து வருவதால் சில நேரம் உயிரிழப்பு ஏற்படுகிறது’’ என்றனர்.