ஊட்டி: உதகை அருகே பொக்காபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழந்தார். மசினக்குடியில் கூலிவேலை செய்யும் நடராஜ் (65) என்பவர், இன்று மாலை அங்குள்ள கோயிலுக்கு சென்று திரும்பும் போது காட்டு யானை அவரை துரத்தித் தாக்கியுள்ளது. படுகாயம் அடைந்த நடராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.