இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சிறுமி சோகமாக இருந்துள்ளார். இதுகுறித்து தாய் கேட்டபோது, தந்தை சார்லஸ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார். இதேபோன்று 2 முறை தவறாக நடந்துகொண்ட அவர், இதுகுறித்து அம்மாவிடம் கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார் என தாயிடம் சிறுமி கூறினாள்.
அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சிறுமியிடம் விசாரணை நடத்தி, சார்லஸ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.