2 மகளுடன் குட்டையில் மூழ்கி பூசாரி பலி

சூலூர்: சூலூர் அருகே குட்டையில் மூழ்கி தந்தை, மகள் உள்பட 3 பேர் பலியாயினர். கோவை சூலூர் அருகே உள்ளது போகம்பட்டியை சேர்ந்தவர் பூசாரி மணிகண்டன் (44). இவரது மனைவி சரோஜா. இவர்களது மகள் தமிழ்ச்செல்வி (15). 10ம் வகுப்பு மாணவி. விடுமுறைக்கு கோவை சுண்டக்காமுத்தூரில் இருந்து மணிகண்டனின் அண்ணன் மனோகரனின் மகள் புவனா (13) ஊருக்கு வந்திருந்தார்.

மகள்கள் குட்டையில் குளிக்க விரும்பினர். இதனையடுத்து நேற்று அருகில் உள்ள குட்டைக்கு சென்றனர். மணிகண்டன் கரையில் நின்றார். மகள்கள் குட்டை நீரில் நீந்தி விளையாடினர். ஆர்வமிகுதியில் ஆழமான பகுதிக்கு சென்ற சிறுமிகள் நீரில் மூழ்கி தத்தளித்தனர். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டன் அவர்களை காப்பாற்ற குட்டையில் குதித்தார். அவரும் குட்டையில் சிக்கினார். இதை பார்த்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த வீரர்கள் குட்டையில் தேடியபோது ஆழமான பகுதியில் இருந்து 3 பேரையும் சடலமாக மீட்டனர்.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு