மகள் காதல் திருமணம் தந்தை தற்கொலை

ஆரல்வாய்மொழி: குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர் சுந்தர்(50). சவுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ரூபா. அங்குள்ள கல்லூரியில் படித்து வந்த இவர்களது மகள் ஆஷிகா முத்துசெல்வி (19) ஒரு வாலிபரை காதலித்துள்ளார். பெற்றோர் எதிர்ப்பையும் மீறி அவர் சமீபத்தில் அந்த வாலிபரை திருமணம் செய்து கொண்டார். இந்த விபரம் தெரிந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்த சுந்தர் நேற்று முன்தினம் இரவு கழிவறைக்கு சென்றவர் வெளியே வரவில்லை. கதவை தட்டியும் திறக்காததால் உடைத்து பார்த்தபோது, கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Related posts

‘மூன்றில் ஒரு பங்கு’

தங்கம் சவரனுக்கு ₹520 உயர்வு: மீண்டும் ரூ.54 ஆயிரத்தை தாண்டியது

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது