இரணியல் அருகே மகள் இறந்த துக்கம் தாங்காமல் தந்தை தூக்கிட்டு தற்கொலை

திங்கள்சந்தை : இரணியல் அருகே மகள் இறந்த துக்கம் தாங்காமல் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திங்கள்சந்தை அருகே உள்ள பறையன்விளை விநாயகர்தெருவை சேர்ந்தவர் அந்தோணி அமல்ராஜ் (41). தச்சு தொழிலாளி. இவரது மனைவி சத்தியகலா (36). இவர்களது இரண்டாவது மகள் ஸ்ரீ லெட்சுமி (15). 9ம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீ லெட்சுமி கடந்த மாதம் 14 ம் தேதி படுக்கை அறையில் மின் விசிறியில் சேலையால் தூக்கு மாட்டி இறந்து விட்டார். மகள் இறந்த துக்கம் தாங்காமல் அந்தோணி அமல்ராஜ் மிகுந்த மனவருத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் சத்தியகலா மூத்த மகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று மாலை அங்கிருந்து போன் செய்த போது அந்தோணி அமல்ராஜ் செல்போன் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த சத்தியகலா உறவினர்களை சென்று பார்க்க கூறியுள்ளார். அந்தோணி அமல்ராஜ் வீட்டுக்கு வந்த உறவினர்கள் கதவை தட்டிப் பார்த்தபோது அனைத்து கதவுகளும் உட்புறமாக பூட்டி கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் இரணியல் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடம் வந்த போலீசார் உறவினர்கள் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுக்கை அறையில் அந்தோணி அமல்ராஜ் போர்வையால் மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகள் இறந்த துக்கம் தாங்காமல் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு!

துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலைதான்: எடப்பாடி பழனிசாமி காட்டம்!