அதன் பிறகு அந்த எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் தாமோதிர கண்ணனை செல்போனில் தொடர்பு கொண்ட ஒருவர், சைபர் கிரைமில் இருந்து பேசுகிறேன். உங்களுடன் செல்போனில் பழகி வந்த அகிலா என்ற பெண் தற்கொலை செய்து கொண்டார். நீங்கள் அவருடன் தவறான கருத்துக்களை பரிமாறிக் கொண்டதால் மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.எனவே, விரைவில் உங்களை கைது செய்ய உள்ளோம், என கூறியுள்ளார். இதனால் பதற்றமடைந்த தாமேதிர கண்ணன், தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என கூறியுள்ளார். உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.60 ஆயிரம் தர வேண்டும் என அந்த நபர் கூறியுள்ளார்.
அதற்கு தாமோதிர கண்ணன் தன்னிடம் ரூ.13 ஆயிரம் மட்டுமே இருப்பதாக கூறி, அதை கூகுள்பே மூலம் அனுப்பி வைத்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தாமோதிர கண்ணன் இதுபற்றி வியாசர்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், போலீஸ் எனக்கூறி பணம் பறித்த நபரை தேடி வருகின்றனர்.