மயிலாடுதுறை: தருமபுர ஆதீனத்தை மிரட்டி பணம் பறித்த வழக்கில் அவரது உதவியாளர் செந்தில் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆபாச வீடியோ உள்ளதாக கூறி தருமபுர ஆதீனத்தை மிரட்டி பணம் பறித்த வழக்கில் செந்திலுக்கு ஜாமின் வழங்க போலீஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் செந்தில் மனுவை தள்ளுபடி செய்தது.