கேரளா: இருடியம் விற்பனை செய்வதாக கேரளாவைச் சேர்ந்தவரிடம் ரூ.10
லட்சம் வாங்கியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கண்ணூரைச் சேர்ந்த ஐஸ் பேக்டரி உரிமையாளர் சாதிக், இருடியம் வாங்க ரூ.10 லட்சத்தை கோவை அருணிடம் கொடுத்துள்ளார். நேற்று திருச்சூருக்கு வந்த கோவை அருண் மற்றும் சஷாங்கனை, சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் பிடித்துச் சென்றனர். சாதிக்கும் அவரது கூட்டாளிகள் 3 பேரும், கோவையைச் சேர்ந்த அருண், சஷாங்களை கடுமையாக தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த அருணை ஆம்புலன்ஸில் ஏற்றி, மருத்துவமனை செல்லுமாறும் நாங்கள் பின்னால் வருகிறோம் என்றும் கூறியுள்ளனர். மருத்துவனை செல்லும் வழியிலேயே அருண் குமார் உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் சஷாங்கனிடம் விசாரணை நடத்தி வருகிறது.