சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் மகனும், ஒன்றிய செயலாளருமான கருணாகரன் பேசுகையில், ‘‘எடப்பாடியார் என்றால் என்ன தெரியும். தனது ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தனது ஆட்சிக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று தெரிந்ததும், கொஞ்சம் கூட யோசிக்காமல் தகுதி நீக்கம் செய்தார்.
புரட்சித் தமிழர் என்றால் சாதாரணமான ஆள் என்று நினைத்தாயா. 10 பேரை அடித்து டான் ஆகவில்லை. அவர் அடித்த அத்தனை பேரும் டான் தான் டா. சசிகலாவை அடித்தார். டிடிவி தினகரனை அடித்தார். பின்பு ஓபிஎஸ்சை காலி செய்தார். அடுத்து மோடிக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அவரையும் காலி செய்வார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தாமரை மலர்கிறதோ இல்லையோ. இரட்டை இலை வளர்ந்தே தீரும்’’ என்றார்.