இதுகுறித்து, தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அப்பகுதிக்கு நேற்று நேரில் சென்று பாதிப்புக்குள்ளான பகுதிகளை பார்வையிட்டார். பின்னர், பழவேற்காடு பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வருகின்ற வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் விதத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணிகள் தொடரும் எனவும் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட கவுன்சிலர் தேசராணி தேசப்பன், தோனிரேவு கன்னிமுத்து, அத்திப்பட்டு புருஷோத்தமன், கோட்டைக்குப்பம் ஜெயராமன், பழவை ஜெயசீலன், ராஜிவ்காந்தி, சுகு மற்றும் ஜமீலாபாத் கிராம நிர்வாகிகள் உடனிருந்தனர்.