இதனால் பயணிகள் வெட்ட வெளியில் கொளுத்தும் வெயிலிலும், மழையிலும் நிற்கும் நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த 2016-17ம் ஆண்டு ரூ.5 லட்சம் செலவில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த பயணியர் நிழற்குடையில் உள்ள இரும்பு இருக்கைகள் உடைந்து, சேதம் ஏற்பட்டு, அதன் தகடுகள் பயணிகளை பதம் பார்க்கிறது. அந்த இருக்கைகளும் மாயமாகி விட்டது. நிழற்குடையின் மேற்கூரை மீதும், அதை சுற்றியும் செடி கொடிகள் படர்ந்து புதர்களாக காட்சியளிக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு மஞ்சங்காரணை பகுதியில் பயணியர் நிழற்குடையை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.