Monday, September 30, 2024
Home » பால்வளத்துறையில் 48 புதிய அறிவிப்புகள் ஆன்லைனில் ஆவின் பொருட்கள் விநியோகம்: அமைச்சர் சா.மு.நாசர் தகவல்

பால்வளத்துறையில் 48 புதிய அறிவிப்புகள் ஆன்லைனில் ஆவின் பொருட்கள் விநியோகம்: அமைச்சர் சா.மு.நாசர் தகவல்

by Karthik Yash

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை 2023-24ம் ஆண்டிற்கான பால்வளத்துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் பதிலளித்தார். மேலும் 48 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

  • ஆவின் இணையம் பால் பண்ணைகளில் தானியங்கி பால் பாக்கெட்டுகள் உற்பத்தித்திட்டம் ரூ.60 கோடியில் செயல்படுத்தப்படும்.
  • பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் புதிய கறவை மாடுகள் வாங்குவதற்கான நிதியுதவி அளிக்கப்படும்.
  • புதிய சாக்லேட் உற்பத்தி அலகு அம்பத்தூர் பால் பண்ணை வளாகத்தில் ரூ.1.50 கோடியில் நிறுவப்படும்.
  • புதிய சாக்லேட் உற்பத்தி அழகு அம்பத்தூர் பால்பண்ணை வளாகத்தில் நிறுவப்படும்.
  • ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனைக்கு இணைய வழி விற்பனை வசதி ஏற்படுத்தப்படும்.
  • பால் உற்பத்தியை அதிகரிக்க பால் உற்பத்தியாளர்களுக்கு வங்கி கடன் மூலம் 2 லட்சம் குறைபாடுகள் வாங்க நபார்டு வங்கியின் விலை நிறுவனத்தின் கடன் உத்திரவாத கெட்ட உதவியுடன் ஆவின் பால் பெருக்கு திட்டம் செயல்படுத்தப்படும்.
  • தொடக்கப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் பதிவு செய்தல் கள ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளுதல் மற்றும் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நல நிதி பணி கணினிமயமாக்கப்படும்.
  • பசுந்தீவன உற்பத்தியை மேம்படுத்த தேசிய விதைக்கழகத்தின் விநியோக உரிமம் பெறப்படும்.
  • கறவை மாடுகளில் இனவிருத்தி திறன் சார்ந்த தகவலை சேகரித்து ஆய்வு செய்ய தரவு ஆய்வகம் ரூ.50 லட்சத்தில் நிறுவப்படும்.
  • பால் உற்பத்தி திறன் பதிவு திட்டம் மேலும் 18 மாவட்ட ஒன்றியங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும்.
  • சூரிய சக்தி மூலம் தண்ணீரை சூடேற்றம் கருவி 277 எண்ணிக்கையில் தொகுப்பு குளிர்விப்பு மையங்களில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
  • கறவை மாடுகளின் பால் உற்பத்தி திறனை அதிகரிக்க நுண்ணூட்ட சத்து கலவை வழங்கப்படும்.
  • கறவை இனங்களின் மடியின் நோய் தடுப்பு மற்றும் புற ஒட்டுண்ணி தடுப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  • கறவைகளின் இனப்பெருக்க திறனை மேம்படுத்த சினை முட்டை ஒருங்கிணைப்பு ரூ.7 கோடியில் செயல்படுத்தப்படும்.
  • மகளிர் தொழில் முனைவர்களுக்காக பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்க, சேலம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஒன்றிய பயிற்சி நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.2.58 கோடியில் மேம்படுத்தப்படும்.
  • மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களில் 50 புதிய நவீன பாலகங்கள் ரூ.2.5 கோடி மதிப்பீட்டிலும், சென்னை மாநகரில் 30 ஏவிஎம் பாலகங்கள் புனரமைப்பு பணிகள் ரூ.10 லட்சத்திலும் மேற்கொள்ளப்படும்.
  • காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் உருவாக்கப்படும்.
  • தேசிய பால்பண்ணை வர்த்தக கண்காட்சி நடத்தப்படும். மாதாந்திர பால் அட்டை விற்பனை மற்றும் புதுப்பிக்கும் பணிகள் கணினிமயமாக்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை அமைச்சர் சா.மு.நாசர் வெளியிட்டார்.

You may also like

Leave a Comment

four × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi