சென்னை: சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது. சீமைக் கருவேல மரங்களை அகற்றும் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டால் தான் அவை மீண்டும்-வளராமல் தடுக்க முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.