சிலிண்டர்கள் வெடித்து ஓட்டல் எரிந்து நாசம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே ஓட்டலில் வைத்திருந்த சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து தீ விபத்து ஏற்பட்டதால் ஓட்டலில் குடிசை முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த சந்தவேலூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர், சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல், வியாபாரத்தை முடித்து விட்டு கார்த்திகேயன் வீட்டிற்கு புறப்பட்டார். ஓட்டலில் ஊழியர்கள் மட்டும் இருந்தனர்.

இந்நிலையில், ஓட்டலில் இருந்த 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து குடிசை முழுவதும் மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக சுங்குவார்சத்திரம் போலீசாருக்கும், ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ பரவாமல் தடுக்க தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில், ஓட்டலின் குடிசை பகுதி முழுவதும் எரிந்து நாசமானது. இரும்பு கம்பிகள் மட்டுமே மிதம் இருந்தன. இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்