பாகிஸ்தானின் தெற்குப் பகுதியில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் புயல் தாக்கம் உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலோர மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பன்னு, லக்கி மார்வாட் மற்றும் காரக் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தன மற்றும் மின்சார கோபுரங்கள் சரிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு மாநில நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.