சென்னையில் இருந்து விலகிச் சென்ற மிக்ஜாம் புயல்: மசூலிப்பட்டினத்தை நெருங்குகிறது: வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்

சென்னை: சென்னையில் இருந்து வடக்கே 200 கி.மீ. தொலைவுக்கு மிக்ஜாம் புயல் விலகிச் சென்றது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் திங்கள்கிழமை முற்பகலில் தீவிர புயலாக வலுப்பெற்றது. நேற்று பிற்பகல்வரை சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 90 கி.மீ. தொலைவு வரை நெருங்கி வந்த நிலையில், ஆந்திரக் கரையை நோக்கி சென்னைக்கு வடக்கே நெல்லூருக்கு தென்கிழக்கே மாலை நகரத் தொடங்கியது.

தற்போது மணிக்கு 7 கி.மீ தொலைவில் நகரும் மிக்ஜாம் புயல் நெல்லூரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது. இன்று பகல் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே பபட்லா அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீவிர புயலாக கரையை கடக்க உள்ளதால் அப்போது 100 கி.மீ.க்கு மேல் காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் விலகிச் சென்ற நிலையில் சென்னையில் 2 நாட்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியது. பல இடங்களில் மழை நீர் வடிந்து வருகிறது; பேருந்து போக்குவரத்து சீரடைகிறது.

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலின் 28ம் தேதி ராணிப்பேட்டையில் அடிக்கல் டாடாவின் புதிய கார் தொழிற்சாலை: ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்க திட்டம்; 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி: ஏ.கே. 47 துப்பாக்கியுடன் வந்த நபர் கைது