தூத்துக்குடி: சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மறுஅறிவிப்பு வரும் வரை தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. மீன்வளத்துறை அறிவிப்பையடுத்து சுமார் 250 விசைப்படகுகள், 500 நாட்டுப்படகுகள் நிறுத்தி வைத்துள்ளனர்.