வியன்டியான்: தென் கிழக்கு ஆசிய நாடான லாவோசில் இந்தியர்கள் சிலர் சைபர் மோசடியில் ஈடுபடும் நிறுவனங்களால் ஏமாற்றப்பட்டு அங்கு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.இந்திய தூதரக அதிகாரிகள் பொக்கியோ மாகாணத்தில் சைபர் மோசடி மையங்களில் ஆய்வு நடத்தி அங்கு சிக்கியிருந்த 47 இந்தியர்களை மீட்டுள்ளனர். இவர்களில் 30 பேர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மற்ற 17 பேரின் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.