மதுரை: மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சைபர் குற்றங்களை விசாரிக்க போதிய தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளார்களா? என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தென் மாவட்டங்களில் பதியப்படும் சைபர் குற்றங்களுக்கு போதிய தொழில்நுட்ப வசதிகள் இருக்கின்றனவா? என தென்மண்டல காவல்துறை தலைவர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த மருத்துவர் பிரியா பிஸ்வகுமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.