அதிமுக கூட்டணியில் சேருவதற்கு அதிக சீட், மாநிலங்களவை எம்பி, அதிக பணம் கேட்டு கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து பேசினார். மக்களவை தேர்தலில் அதிமுக, பாமக கூட்டணி தொடர்பாக சந்தித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என பாமக தலைவர் அன்புமணி கூறியிருந்தார். கூட்டணி அமைத்து போட்டியிட பாமக முடிவெடுத்துள்ள நிலையில் இருவரும் சந்தித்து பேசியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பாமக போட்டியிட விரும்பும் தொகுதி எண்ணிக்கை குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.