கல்லூரி மாணவனுக்கு சரமாரியாக வெட்டு

சென்னை: தி.நகர் சவுத் போக் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் கல்லூரி மாணவன் கார்த்திக் (19) நேற்று முன்தினம் மாலை நின்று கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கும்பல் ஒன்று திடீரென கார்த்திகை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. அவர் உதவி கேட்டு கதறியுள்ளார். இதை பார்த்த ராஜா (40) என்பவர் அந்த கும்பலை தடுக்க முயன்றார். ராஜாவையும் அவர்கள் வெட்டிவிட்டு தப்பினர். இதில் படுகாயமடைந்த கல்லூரி மாணவன் மற்றும் ராஜாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். கார்த்திக் மற்றும் ராஜா ஆகியோர் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் சவுத் போக் சாலையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரித்தனர். அப்போது சிஐடி நகரை சேர்ந்த 6 பேர் கும்பல் தாக்கியது தெரியவந்தது. அதில் ஒருவரை பிடித்து விசாரித்தபோது, கார்த்திக் மற்றும் உடன் படிக்கும் மற்றொரு மாணவனுடன் முன்விரோதம் காரணமாக தாக்குதல் சம்பவம் நடந்தது தெரியவந்தது. தொடர்ந்து தலைமறைவான 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். பிடிபட்டது கல்லூரி மாணவன் என்பதால் தகவல் தர போலீசார் மறுத்துவிட்டனர்.

Related posts

மக்களவையில் ராகுல் காந்தி ஆற்றிய உரையின் சில பகுதிகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கம்

அம்மன் கோயில்கள்: மூத்தோருக்கு கட்டணமில்லா பயணம்

ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து பலி