இது நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தவறான வர்த்தக நடைமுறையாகும். இது குறித்து, சில்லரை வர்த்தக தொழில் கூட்டமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் வாடிக்கையாளர் பில் வாங்குவதற்கு தங்களது மொபைல் எண் உள்ளிட்ட தகவல்களை அளிப்பது கட்டாயமாக்கப் படவில்லை. ஆனால் வர்த்தக பரிவர்த்தனையை முடிக்க வாடிக்கையாளர்களிடம் மொபைல் எண்ணை கேட்பது அவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. இது போன்ற பெரும்பாலான சூழல்களில் வாடிக்கையாளர்களுக்கு வேறு வாய்ப்புகள் எதுவும் அளிக்கப்படுவதில்லை. எனவே வாடிக்கையாளர்களிடம் மொபைல் எண் கேட்டு வற்புறுத்த கூடாது,” என்று கூறினார்.