2 கைப்பிடி அளவு கறிவேப்பிலை
1 வெங்காயம்
1/2 டீஸ்பூன் சீரகம்
5 பூண்டு பல்
1 பட்டை, கிராம்பு 2, சோம்பு 1 டீஸ்பூன்
1 தக்காளி
1 கப் வேகவைத்த துவரம் பருப்பு
1 டேபிள் ஸ்பூன் நெய்
தண்ணீர் 3 கப்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு மிளகுத் தூள்.
செய்முறை
குக்கரில் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்க்கவும். பின்னர் அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் கறிவேப்பிலை, வெந்த துவரம்பருப்பு, உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். குக்கர் மூடி போட்டு இரண்டு விசில் விடவும். விசில் வந்ததும் மூடியைத் திறந்து வடிகட்டவும். வடிகட்டிய சூப்பில் மிளகுத்தூள் தூவி எடுத்தால் கறிவேப்பிலை சூப் தயார்.