சென்னை: நடப்பு பருவத்திற்கு தேவையான உரம் மற்றும் இடுபொருட்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் யூரியா 30,000 மெட்ரிக் டன் இருப்பாக வைக்கப்பட்டுள்ளது. டிஏபி 15,000 மெட்ரிக் டன், எம்ஓபி 9,200 மெட்ரிக் டன் என்ற அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது.