டெல்லி: நாம் கலாச்சார மோதலை ஊக்குவிக்காமல் நமக்கான நல்லிணக்கத்தை வலியுறுத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வேற்றுமையில் ஒற்றுமை என்ற மகத்தான கொள்கையை கொண்டாடும் நாடு இந்தியா என்று சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்று காணொளியில் பிரதமர் கூறினார்.