மதுரை : கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு விசாரணை அறிக்கை தரப்பட்டது. பாதிக்கப்பட்ட அருண்குமாருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவையடுத்து விசாரணை அறிக்கை தரப்பட்டது. நெல்லை அம்பாசமுத்திரத்தில் கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கை அரசின் உயர்மட்ட குழு விசாரித்தது. உள்துறை செயலாளர் அமுதா தலைமையில் உயர்மட்ட குழு ஆடத்திய விசாரணை அறிக்கை வழங்கப்பட்டது. தொடர்புடைய அதிகாரிகள், காவலர்களை மாவட்டத்திற்கு வெளியே பணியிட மாற்றம் செய்ய அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.