நீலகிரி: கூடலூர் அடுத்த ஓவேலியில் காட்டு யானை தாக்கி கிரிஜா என்ற மூதாட்டி படுகாயம் அடைந்தார். பேத்தியை பள்ளியில் இருந்து அழைத்து வரச் சென்ற போது காட்டில் இருந்து வெளியேறிய யானை கிரிஜாவை தாக்கியது. கை, கால், மூட்டுகளில் காயம் அடைந்த கிரிஜாவை வனத்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்