கடலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல்

கடலூர்: கடலூர் மத்திய சிறையில் இரு கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  கடலூர் முதுநகர் அருகே உள்ள கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த அழகுமுத்து என்பவரும், நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து பகுதியை சேர்ந்த கோபி என்பவரும் கடந்த ஒரு வருடமாக விசாரணைக் கைதிகளாக ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதைப் பார்த்த சிறை காவலர்கள் அங்கு சென்று இருவரையும் விலக்கி விட்டனர். இதன் பின்னர் இருவரையும் வேறு வேறு சிறையில் காவலர்கள் அடைத்தனர்.இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூர் மத்திய சிறையில் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு