இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “கடலூர், பட்டம்பாக்கம் பகுதியில் இரு தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர், பல்வேறு நபர்கள் காயமடைந்து உள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்பவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மேலும் விபத்தில் காயமுற்றோருக்கு உயரிய சிகிச்சை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்” என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.