கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மழையால் நெல் கொள்முதல் நிலையத்தில் 20,000 நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தது. போத்திரமங்கலத்தில் நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்யாததால் மழையில் நனைந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.