கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம்: 4 தனிப்படைகள் அமைப்பு

கடலூர்: கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலைசெய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடலூர் அருகே உள்ள காராமணி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுதன்குமார் (40). இவர் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஐடி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இன்று காலை இவரது வீட்டிற்குள் சுதன் குமார்.

அவரது தாயார் கமலேஸ்வரி (65) மற்றும் சுதன்குமாரின் மகன் நிஷாந்தன் (10) ஆகிய 3 பேரை கொலை செய்து ஒவ்வொரு அறையில் ஒருவர் என தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக, நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் டி.எஸ்.பி. ராஜாராமன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வீடு முழுவதும் ரத்தம் சிதறிக் கிடப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 500 பெண் பணியாளர்கள் தங்குவதற்கு 870 படுக்கை வசதியுடன் குடியிருப்புகள்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் கையெழுத்து

மாதவரத்தில் இருந்து உல்லாசத்துக்கு அழைத்து வந்தபோது தகராறு இளம்பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்த சைக்கோ இன்ஜினியர்: துண்டு துண்டாக வெட்டி கொடூரம்; போலீஸ் அதிகாரி வீட்டு முன் வீச்சு; சென்னை துரைப்பாக்கத்தில் பயங்கரம்

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் மருத்துவ உதவி நிதியாக 8 பேருக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்