கடலூர்: கடலூர் மாவட்டம் தெற்குமேல்மாம்பட்டை சேர்ந்த 4 வயது குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்ததால் உயிரிழந்ததாக புகார் அளிக்கப்பட்டது. மருத்துவரை கைது செய்யக்கோரி சென்னை – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். பெண் குழந்தை உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்த மருத்துவத்துறைக்கு ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.