அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் அவர் அமைச்சர் என தெரியவில்லை என கூறியதாக தெரிகிறது. இதனால், ஆவேசமடைந்த தொண்டர்கள் தமிழ் மற்றும் தமிழ்நாடு குறித்து தெரியாத நபர்களை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிக்கு வைத்தது தான் இதற்கு காரணம் என தெரிவித்தனர். இதுகுறித்து அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறுகையில்,“பாதுகாப்பு கருதிதான் காவல்துறையினர் அப்படி செய்தார்கள். இதனை பெரிதாக்க வேண்டாம். ேவண்டும் என்று அவர்கள் செய்யவில்லை. வேண்டும் என்று செய்திருந்தால் அதனை நாங்கள் கண்டிப்போம். பாதுகாப்பு கருதி தான் செய்துள்ளார்கள்’’ என்றார்.