போலீசார் குவிக்கப்பட்டிருந்தாலும் தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் வாகனத்தை சுற்றி தொண்டர்கள் திரண்டிருந்தனர். இதனால் ஊர்வலம் குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. நிலமையை உணர்ந்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஊர்வல வாகனத்தில் நின்று கொண்டு, இறுதி ஊர்வல வாகனம் செல்ல ஒத்துழைப்பு தருமாறு ஒலிபெருக்கியில் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். வாகனம் செல்ல முடியாத அளவிற்கு பொதுமக்கள் கூட்டம் சாலைகளில் தழும்பி இருந்ததால் விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் மிகவும் மெதுவாக நகர்ந்து சென்றது. எனவே, வாகனம் செல்வதற்கு ஒத்துழைப்பு தருமாறு பிரேமலதா விஜயகாந்த் ஒலிபெருக்கியில் திரண்டு வந்த தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.