குறிப்பாக தென்மாவட்ட ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. இதேபோல் செங்கல்பட்டு – சென்னை கடற்கரை, திருமால்பூர் – சென்னை கடற்கரை, காஞ்சிபுரம் – சென்னை கடற்கரை வரையிலான ரயில்கள் தாமதமாக வருவதால் கல்லூரி, பணிக்கு செல்வோர் தவிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். தண்டவாளம் சீரமைப்பு காரணமாக சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வரையிலான புறநகர் மின்சார ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.
இதனால் மின்சார ரயிலுக்காக செங்கல்பட்டில் காத்திருந்த பயணிகள் இயக்கப்படும் ஓரிரு ரயிகளில் ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றன. ரயில்கள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து செங்கல்பட்டில் இருந்து பிறபகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளிலும் பயணிகள் நெரிசல் அதிகரித்து காணப்பட்டது. கல்லூரி, வேலைக்கு செல்வோர் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர்.