தொடர்ந்து, 15 விவசாய பயனாளிகளுக்கு வேளாண் பயிர் செடிகள் மற்றும் பசுந்தாள் உர விதைகள் மற்றும் கூட்டுறவு சங்கம் மூலம், 19 விவசாய பயனாளிகளுக்கு 20 லட்சத்து 95 ஆயிரத்து 792 ரூபாய் மதிப்பீட்டில் பயிர் கடன்களும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், 3 விவசாய பயனாளிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கான பணி ஆணையையும் கலெக்டர் வழங்கினார்.இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.