தசரா கொண்டாட்டத்தில் உருவ பொம்மைகள் எரிக்கப்படுவது ஒருபுறம் இருந்தாலும் பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதும் டெல்லி மாசுவிற்கு முக்கிய காரணமாக உள்ளது. இது தொடர்பாக அண்டை மாநில அரசுகளுடன் பேசியுள்ள டெல்லி அரசு பயிர்கழிவு எரிப்பை கட்டுப்படுத்த வலியுறுத்தியுள்ளது. இதனிடையே ஒற்றை படை, இரட்டை படை பதிவெண் வாகன கட்டுப்பாடுகளை கொண்டு வரவும் டெல்லி அரசு ஆலோசித்து வருகிறது. மேலும், தீபாவளி நெருங்குவதால் டெல்லியில் காற்று மாசு அபாயகரமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.