சென்னை: பயிரை அறுவடை செய்யும் வரை 2 மாதங்கள் காத்திருக்க முடியாதா? என என்.எல்.சி. நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. விளைநிலத்தில் புல்டோசர் கொண்டு கால்வாய் தோண்டும் பணி நடந்ததை பார்க்கும்போது அழுகை வந்ததாக நீதிபதி எம்.தண்டபாணி வேதனை தெரிவித்தார. நிலத்தை எடுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் பயிர்கள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது என நீதிபதி கூறினார்.