புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக போராட்டம்
*மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 200-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கண்டன பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து தல்லாகுளம் தபால் நிலையம் வரை வழக்கறிஞர்கள் கண்டன பேரணி.
*நாகையில் வழக்கறிஞர்கள் கருப்புச் சட்டை அணிந்து 3 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
*புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம்.
*திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்தை 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டு பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம்.
*கும்பகோணம் வருமான வரி அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.
*பல்லடம் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
*கடலூர் சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கி முன்பு விருத்தாசலம் வழக்கறிஞர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்.