தேச துரோக சட்டம் சரியானது தானா? என்பதை ஆராயும் விவகாரத்தை வழக்கை ஒத்தி வைக்க வேண்டும்’ என்று வாதிட்டார். அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘தேசத் துரோக குற்றத்திற்கு எதிரான மனுக்களை, ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உத்தரவிடப்படுகிறது’ எனக்கூறி ஒன்றிய அரசின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.