சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராகிறார் ஜெய் ஷா..!!

டெல்லி: ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராகிறார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா தற்போது பிசிசிஐ செயலாளராக உள்ளார். ஐசிசி தலைவராக உள்ள கிரேக் பார்க்லே பதவி விலக உள்ளதை அடுத்து ஜெய் ஷா தலைவராகிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராகும் 3வது இந்தியர் ஜெய் ஷா. ஏற்கனவே ஜக்மோகன் டால்மியா, சரத்பவார் ஆகியோர் ஐசிசி தலைவராக பதவி வகித்தனர்.

Related posts

மும்பையில் நடிகர் சல்மான் கானின் தந்தைக்கு பெண் ஒருவர் மிரட்டல்

பழைய குற்றாலத்தில் இரவு நேர குளியலுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; ஊராட்சி நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு

கர்ப்பிணியின் வயிற்றின் மீது நாய் ஏறியதால் கலைந்த 4 மாத கரு