சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூரில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளர்கள் கார்த்திகேயன், புள்ளகுட்டி ஆகியோர் உயிரிழந்தனர்.