விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் குகன்பாறையில் நேற்று வெடி விபத்து ஏற்பட்ட லட்சுமி பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உத்தரவு அளித்துள்ளார். சாத்தூர் அருகே குகன்பாறையில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். குருமூர்த்தி (20) என்ற தொழிலாளி படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளார்.