இவர்கள், தங்களின் மாடுகளை சாலைகளில் திரியும்படி விட்டுவிடுகின்றனர். இதனால் அம்மாடுகள் ஓஎம்ஆர் சாலை உள்பட பல்வேறு பகுதி சாலைகளில் வாகனங்களை மறித்தபடி கடந்து செல்கின்றன.
மேலும், அவ்வழியே தங்களை விரட்ட வருபவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களை விரட்டி முட்டுகின்றன. இதில் பலர் படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும், ஒருசில மாடுகள் சாலையில் நின்றபடியும், படுத்து ஓய்வெடுப்பதால், அங்கு வேகமாக வரும் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் அச்சத்துடனே கடந்து செல்ல வேண்டி உள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில் கடந்த ஆண்டு மாவட்ட நிர்வாக உத்தரவின்பேரில், சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பேரூராட்சி நிர்வாகம் பிடித்து, சம்பந்தப்பட்ட மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தது. எனினும், தற்போது சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. எனவே, ஓஎம்ஆர் உள்பட பல்வேறு சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து, சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள்மீது மாவட்ட கலெக்டர் மற்றும் பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.