இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. பேரருவியில் நேற்று தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது. இதனால் உற்சாகமடைந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து ஆனந்தமடைந்தனர். கடந்த சில நாட்களாக வறண்டு கிடந்த அருவிகளில் தற்போது தண்ணீர் கொட்டுவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.