இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி ஆர் கவாய், பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் கே விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு, சர்ச்சைக்குரிய வனத்துறை அதிகாரியை மீண்டும் முக்கிய பொறுப்பில் நியமித்த உத்தராகண்ட் முதல்வருக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும் அவர்கள் பிறப்பித்த உத்தரவில்,”நினைத்ததை எல்லாம் செய்யும் மன்னராட்சி காலத்தில் நாம் இல்லை. மக்களின் நம்பிக்கைக்கு உரிய வகையில் முதலமைச்சர் செயல்பட வேண்டும். வன அதிகாரி ராகுலை நியமிப்பதாக இருந்தால், குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ராகுலுக்கு எதிரான துறைரீதியான நடவடிக்கை கைவிடப்பட்டு இருந்தால் அவருக்கு மீண்டும் பொறுப்பு தந்திருக்கலாம். வனத்துறை அமைச்சர், தலைமைச் செயலரின் முடிவில் இருந்து, தான் மாறுபட்டால் அதற்கான காரணத்தை முதல்வர் தெரிவிக்க வேண்டும்.முதல்வராக இருப்பதாலேயே அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா,”இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பி மாநில அரசை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.