தகவலறிந்துஆர்டிஓ லாவாண்யா தலைமையில் வருவாய்த்துறையினர் சென்று ஆய்வு செய்தனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வண்ணம் சுற்றுலா பயணிகளை பத்திரமாக வெளியேற்றி தனியார் அருவிகளுக்கு செல்லாதவாறு குண்டாறு அணையின் கீழ் பகுதியில் நுழைவாயில் கேட்டிற்கு பூட்டு போட்டனர். இதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதே போன்று குண்டாறு அணைப்பகுதிகளில் குளிக்கவும் தடை விதித்துள்ள போலீசார் அதையும் மீறி குளிப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர். இது குறித்து ஆர்டிஓ லாவண்யா கூறுகையில், ‘தனியார் அருவிகளில் குளிக்க ஒரே நாளில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். எனவே தற்காலிகமாக அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அருவிகள் செயற்கையாக உருவாக்கப்படவில்லை. ஏற்கனவே உள்ள வழித்தடம் தான். எனவே அருவிகளுக்கு நிரந்தரமாக தடை விதிக்கப்படவில்லை’ என்றார்.