ஆதலால் சீமை கருவேல மரங்களை அகற்றி கால்வாய் தூர்வார எங்களது தொண்டு நிறுவனத்திற்கு அனுமதி கோரி விண்ணப்பித்தோம். ஆனால் கால்வாயைத் தூர்வார மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தொண்டு செய்ய வருகிறார்கள்; ஆனால் அவர்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பை தரவில்லை. எனவே நீர்வரத்து கால்வாய்களைத் தூர்வார தங்கள் தொண்டு நிறுவனத்துக்கு அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும், “இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள்,”தமிழக முதல்வர் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறார். ஆனால் இங்குள்ள அதிகாரிகளின் பொறுப்பின்மையால் முதலீடு செய்பவர்கள் திரும்பி விடுகின்றனர்.ஆயிரம் இளைஞர்கள் ஆர்வமாக தொண்டு செய்ய வந்தாலும் அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை. இளைஞர்கள் தாமாக முன்வந்து கால்வாய்களை தூர்வார அனுமதி கோரியும் ஏன் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை?. கால்வாயைத் தூர்வார அனுமதி கோரிய மனு மீது ராமநாதபுரம் ஆட்சியர் பதிலளிக்க ஆணையிடுகிறோம், “இவ்வாறு தெரிவித்தார்.